×

ஒய் பிரிவு பாதுகாப்பு தலைவரால் உயிருக்கு ஆபத்து: நாஞ்சில் சம்பத் டிவிட்டால் பரபரப்பு

நாகர்கோவில்: தனது உயிருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பில் உள்ள தலைவரால் ஆபத்து என நாஞ்சில் சம்பத் செய்த டிவிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக  அரசியல் பேச்சாளரான நாஞ்சில் சம்பத் நேற்று முன்தினம் தனது டிவிட்டர் பக்கத்தில், ஒய் பிரிவு பாதுகாப்பில் உள்ள தலைவரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக  பதிவிட்டிருந்தார். இதில் தமிழக காவல்துறையையும் டேக் செய்திருந்தார். இதனையடுத்து உளவு பிரிவு போலீசார் இதுபற்றி விசாரணை  செய்தனர். நண்பர் ஒருவர் அளித்த தகவலையே டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாக நாஞ்சில் சம்பத்  தெரிவித்துள்ளார். போலீஸ் பாதுகாப்பு வேண்டுமா என கேட்டதற்கு, தேவையில்லை. அரசியல் கூட்டங்களில் பேசும்போது,  பாதுகாப்பு தேவைப்பட்டால் கேட்கிறேன் எனக்கூறியதாக போலீசார் கூறினர். மேலும், இந்த பதிவில் நாஞ்சில் சம்பத்தை ஆதரித்தும், எதிர்த்தும் பலர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை நாஞ்சில் சம்பத் தனது பதிவை டிவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். டிவிட்டர் பதிவு குறித்து நாஞ்சில் சம்பத் கூறுகையில், பேச்சாற்றல் மிகுந்த என்னை பா.ஜனதாவிற்கு வளைக்க பார்த்தனர். நான் அண்ணா காலத்திலேயே திராவிடத்தில் ஊறியவன் என்பதால் மறுத்து விட்டேன். இதனால், என்மீது அவர்கள் வன்மம் கொண்டுள்ளனர். அண்ணாமலை தூண்டுதலில் எனக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். போனில் அருவருக்கதக்க வகையில் பேசுகின்றனர். இதற்கு நான் அஞ்சப்போவதில்லை. 2024 நாடாளுமன்ற தேர்தலில் என்னை பிரசாரம் செய்ய விடாமல் தடுக்க இதுபோன்று செயல்படுகின்றனர். நான் சுடுகாட்டிற்கு செல்லும் வரை திராவிடத்தை விட்டு மாறமாட்டேன். மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். எனவே திமுகவிற்கு ஆதரவாக தொடர்ந்து பிரசாரம் செய்வேன் என்றார்….

The post ஒய் பிரிவு பாதுகாப்பு தலைவரால் உயிருக்கு ஆபத்து: நாஞ்சில் சம்பத் டிவிட்டால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Y Division ,Sampath ,Pandemonium ,Nanjil Nagercoil ,Nanji ,Y division security ,
× RELATED சாக்கடை வடிகால் பணிக்காக...