×

லாரி திடீர் பிரேக் போட்டதால் விபத்து: டாரஸ் லாரி டிரைவர் பலி

ஆவடி: செங்கல்பட்டு ரத்தினமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (60). டாரஸ் லாரி டிரைவர். இவர், நேற்று அதிகாலை எண்ணூரில் லோடு இறக்கிவிட்டு செங்கல்பட்டு நோக்கி லாரியை ஓட்டி சென்றார். ஆவடி அடுத்த கோலப்பஞ்சேரி டோல்கெட் அருகே வந்தபோது, முன்னால் சென்ற லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதனால் மாரியப்பன் ஓட்டி வந்த லாரி, அந்த லாரியின் பின்பகுதியில் மோதியது. இதில் படுகாயமடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், மாரியப்பன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்….

The post லாரி திடீர் பிரேக் போட்டதால் விபத்து: டாரஸ் லாரி டிரைவர் பலி appeared first on Dinakaran.

Tags : Taurus ,Avadi ,Mariyappan ,Chengalpattu Rattinamangalam ,Ennore ,Dinakaran ,
× RELATED ஏன் பார்க்க வேண்டும் திருமணப் பொருத்தம்?