×

அனலாடீஸ்வரர் கோயிலில் புதியதேர் வெள்ளோட்டம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

தொட்டியம்: தொட்டியம் அனலாடீஸ்வரர் கோயிலில் நேற்று நடந்த புதிய தேர் வெள்ளோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தொட்டியத்தில் திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் சிவாலயம் அமைந்துள்ளது. பழமைவாய்ந்த இக்கோயிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகவிழா நடைபெற்றது. சிவாலயத்தின் உற்சவத்திற்காக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக புதியதேர் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தது.

இப்பணிகள் முடிவடைந்த நிலையில் தேர் வெள்ளோட்டம் நேற்று விடப்பட்டது. இதனை முன்னிட்டு யாகவேள்வி மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புதிய தேருக்கு பூஜைகள் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதிகள் வழியாக தேர் சிவாலயத்திற்கு சென்றது. ேகாயில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags : devotees ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...