×

ஓட்டு போடுங்க… போடாமல் போங்க பாஜ ஆட்சிக்கு வந்தாலும் சரி… ஆட்சிக்கு வராவிட்டாலும் சரி… ராதாரவி பேச்சால் நிர்வாகிகள் ‘ஷாக்’

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் பாஜவின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் பேருந்து நிலையம் அருகில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி பேசுகையில், ‘‘ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலையை பற்றி இழிவாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பிரதமர் மோடி செய்து வரும் நல்ல திட்டங்களைப் பற்றி மக்கள் தெரிந்து கொண்டு, இனிவரும் தேர்தல்களில் பாஜவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும், என்றார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் ஒருவர் எழுந்து சென்றார். அப்போது ராதாரவி, ‘‘பாஜவுக்கு ஓட்டு போடுங்க… போடாமல் கூட போங்க… பாஜ ஆட்சிக்கு வந்தாலும் சரி, ஆட்சிக்கு வராவிட்டாலும் சரி, நான் வருடத்திற்கு 2 படங்கள் நடித்து சம்பாதித்து விடுவேன்’’ என கோபத்துடன் பேசினார். இதனால் கூட்டத்துக்கு வந்த பாஜ நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்….

The post ஓட்டு போடுங்க… போடாமல் போங்க பாஜ ஆட்சிக்கு வந்தாலும் சரி… ஆட்சிக்கு வராவிட்டாலும் சரி… ராதாரவி பேச்சால் நிர்வாகிகள் ‘ஷாக்’ appeared first on Dinakaran.

Tags : BJP ,Radharavi ,Kariyapatti ,Kariyapatti, Virudhunagar district ,Dinakaran ,
× RELATED காரியாபட்டி கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டம்