என்னென்ன தேவை?
மைதா 2 கப், ரவை 1/2
கப், எள் 1/4 கப், நெய் 1/4 கப் + 1 டேபிள்ஸ்பூன், பொடித்த சர்க்கரை
1/2 3/4 கப், சமையல் சோடா 1/2 சிட்டிகை, உப்பு 1 சிட்டிகை, பொரிக்க
எண்ணெய் தேவைக்கு, தேவையானால் தெளிக்க பால் 1/2 கப்.
எப்படிச் செய்வது?
மைதா,
ரவை, சோடா உப்பு, உப்பு போட்டு நன்றாக கலந்து 1/4 கப் நெய்யை சிறிது
சூடாக்கி சேர்த்து கலக்கவும். சர்க்கரை, எள் போட்டு பால் தெளித்து
கெட்டியாக பூரி மாவு பதத்திற்கு பிசைந்து 1520 நிமிடம் மூடி வைக்கவும்.
இப்போது மூடி வைத்த மாவில் 1 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து மீண்டும்
பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக செய்து உள்ளங்கைக்கு மத்தியில்
வைத்து 1/2 இன்ச் கனத்திற்கு அழுத்திக் கொள்ளவும். எண்ணெயை சூடாக்கி
மிதமான தீயில் வைத்து 5 மட்ரிகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து
எண்ணெயை வடித்து பரிமாறவும்.
குறிப்பு:
மைதாவிற்கு பதில் கோதுமை மாவு சேர்க்கலாம்.