×

கத்திமுனையில் தனியார் கம்பெனி ஊழியரிடம் பணம், செல்போன் பறிப்பு: சகோதரர்கள் கைது

திருவள்ளூர்: கத்திமுனையில் தனியார் கம்பெனி ஊழியரிடம் செல்போன், பணம் பறித்து தப்பிய சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றுபவர் சமர்கோத்தையா (23). இவர் நேற்று வேலை முடிந்ததும் வீட்டுக்கு செல்வதற்காக சாலையில் நடந்துசென்றார். அப்போது அவரை மர்ம நபர்கள் 2 பேர் மறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் 2 ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டு  தப்பிவிட்டனர். இதுகுறித்து சமர்கோத்தையா கொடுத்த புகாரின்படி, வெள்ளவேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில், வெள்ளவேடு அடுத்த மேல்மணம்பேடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகளான ராஜேஷ், அவரது தம்பி விஷ்வா ஆகியோர்தான் வழிப்பறி செய்தவர்கள் என்று தெரிந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். …

The post கத்திமுனையில் தனியார் கம்பெனி ஊழியரிடம் பணம், செல்போன் பறிப்பு: சகோதரர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Kathimuna ,Thiruvallur District ,Bliss ,
× RELATED மீஞ்சூரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது