×

சென்னை வாலிபர் கொலை வழக்கில் காவலாளிக்கு 7 ஆண்டு சிறை: காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே புதுநல்லூர் கிராமத்தில் தனியார் நிறுவன காவலாளியை கொலை செய்த மற்றொரு காவலாளிக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ5 ஆயிரம் அபராதமும் விதித்து காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.சென்னை போரூர் ஆர்.ஏ.நகர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் மகன் சுராஜ் என்ற சுராஜ்குமார் (35). இவர், சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புதுநல்லூர் கிராமத்தில் உள்ள ரப்பர் தயாரிப்பு நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்தவர் செந்தூர்பாண்டி (56). இருவருக்கும் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்திற்கு தண்ணீர் விடுவது சம்பந்தமாக கடந்த 14.4.2015ம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. இத்தகராறில், செந்தூர்பாண்டி, சுராஜை உருட்டுக்கட்டையில் தாக்கியதில் அவர் பலத்த காயம் அடைந்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 3 நாட்களுக்கு பிறகு உயிரிழந்தார். இது சம்பவம் தொடர்பாக சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தூர்பாண்டியை கைது செய்தனர். இந்த வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி போதிய ஆதாரங்களை சமர்ப்பித்தன்பேரில் செந்தூர்பாண்டி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால், காஞ்சிபுரம் கூடுதல் மாவட்ட நீதிபதி எம்.இளங்கோவன் செந்தூர்பாண்டிக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்….

The post சென்னை வாலிபர் கொலை வழக்கில் காவலாளிக்கு 7 ஆண்டு சிறை: காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kanchipuram ,Pudunallur ,
× RELATED கோடை வெப்பத்தில் இருந்து வாகன...