×

வேடந்தாங்கல் துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை

மதுராந்தகம்: வேடந்தாங்கல் துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தவேண்டும் என்று பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு செவிலியர் பணியில் உள்ளார். இவர்தான் அருகில் உள்ள 7 கிராமங்களுக்கு சென்று மருந்து, மாத்திரை வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றார். இதனால் வேடந்தாங்கல் துணை சுகாதார நிலையம் பெரும்பாலான நேரங்களில் மூடியே கிடக்கிறது.வேடந்தாங்கலில் உலக புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் உள்ளது. ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் மழை பெய்து ஏரியில் தண்ணீர் நிரம்பியவுடன் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்துக்காக இங்குள்ள மரங்களில் கூடு கட்டி வசித்துவிட்டு பின்னர் குடும்பத்துடன் தங்களது நாடுகளுக்கு சென்றுவிடும். இந்த நிலையில்,  நவம்பர் மாதம் சரணாலயம் திறக்கப்படுகிறது. ஜூன் மாதம் வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஏரியில் உள்ள மரங்களில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பறவைகளை கண்டு களித்து செல்கின்றனர்.எனவே, வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அவசர மருத்துவ உதவிக்கு கிராமத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தவேண்டும். ஒரு மருத்துவரை நியமித்து சுற்றுலாப் பயணிகளுக்கும் அப்பகுதி மக்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post வேடந்தாங்கல் துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vedantangal sub-health center ,Madhuranthakam ,Veddangal ,sub-health center ,Chengalpattu District… ,Dinakaran ,
× RELATED தெருமுனை பிரசார கூட்டம் மோடியின்...