×

ராணுவ அதிகாரி வீட்டில் 40 சவரன், 40 லட்சம் கொள்ளை

திருவொற்றியூர்: மணலி அருகே சேலைவாயில், துர்க்கை அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஜான் போஸ்கோ (63). ராணுவத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சூசை அருள்மேரி. ஜான் போஸ்கோ தற்போது திருவொற்றியூர் கான் காடு சரக்குப் பெட்டகத்தில் செக்யூரிட்டி அதிகாரி.  இவர், நேற்று காலை குடும்பத்துடன் தேவாலயம் சென்று விட்டு, மாலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 சவரன் நகை, 40 லட்சம் மற்றும் லேப்டாப் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் ேபரில், மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடுகின்றனர். …

The post ராணுவ அதிகாரி வீட்டில் 40 சவரன், 40 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Sawaran ,John Bosco ,Durgai Avenue, Selaiwai ,Manali ,Dinakaran ,
× RELATED நாகையில் 110 சவரன் நகைகள் கொள்ளை..!!