×

கிண்டல் செய்த தகராறில் சிறுவனுக்கு பிளேடு வெட்டு: 2 நண்பர்கள் கைது

அண்ணாநகர்: சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவர்கள் 3 பேர் நண்பர்கள். இவர்கள் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பல் சரியாக இல்லாத ஒருவனை மற்ற 2 பேர் கிண்டல் செய்து உள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த சிறுவன், அவர்களை கண்டித்துள்ளான். இதையடுத்து, அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த 2 சிறுவர்கள், அவனை சரமாரியாக தாக்கினர். மேலும், அச்சிறுவனின் கையை பிளேடால் அறுத்துவிட்டு, அங்கிருந்து தப்பினர். இதில், படுகாயமடைந்த அவன், கையில் ரத்தம் சொட்ட சொட்ட அலறி துடித்தான். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர், அவனை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, அச்சிறுவன் டி.பி.சத்திரம் போலீசில் புகார் அளித்தான். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2சிறுவர்களை கைது செய்தனர்….

The post கிண்டல் செய்த தகராறில் சிறுவனுக்கு பிளேடு வெட்டு: 2 நண்பர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Annagar ,Chennai D. ,GP ,Blade ,
× RELATED பட்டப்பகலில் சாலையில் கோயில் பூசாரியுடன் மல்லுக்கட்டிய ஜிபி முத்து