×

அண்ணாமலை, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையா?: ஆதீன விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் கருத்து

புதுக்கோட்டை: அரசியல் செய்வதற்காக தமிழ்நாடு அரசு மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புழுதிவாரி தூற்றி வருவதாக  திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அறநிலையதுறையில் உள்ள அதிகாரிகளோ, மடாதிபதிகள், ஆதீனங்கள் என அவரவர்களுக்கு சில அதிகாரங்கள் உள்ளதாக கூறினார். அதேபோன்று அரசுக்கும் சில கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு உரிமை உள்ளது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையா? அவர் சொல்வது வேதவாக்கா? என கேள்வி எழுப்பியுள்ள திருநாவுக்கரசர், அரசியல் செய்வதற்காக தமிழா அரசின் மீது புழுதிவாரி தூற்றுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மடாதிபதிகள் வாயை திறக்கக்கூடாது, பேசக்கூடாது என்பது அல்ல என்று கூறிய திருநாவுக்கரசர், ஆனால் மடாதிபதியோ, தேவாலயம், பள்ளிவாசல், இந்துமதக் கோயில்கள் சம்பந்தப்பட்டவர்கள், மதத்தலைவர்கள் என யாராக இருந்தாலும் அவரவர்கள் பாராட்டிக் கொள்ளலாம்; அவர்கள் மதத்தை புகழ்ந்து கொள்ளலாம் என்றார். ஆனால் பிற மதத்தினரை புண்படுத்தும் விதத்திலேயோ, மற்ற நம்பிக்கை உடைக்கும் விதத்திலோ பேசக்கூடாது என்று திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டார்.            …

The post அண்ணாமலை, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையா?: ஆதீன விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் கருத்து appeared first on Dinakaran.

Tags : Congress ,Thirunavukarasar ,Atheena ,Pudukottai ,BJP ,president ,Annamalai ,Tamil Nadu government ,Trichy Constituency ,Thirunavukkarasar ,Adeena ,
× RELATED ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த...