×

பஸ்சில் 10 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைது

வேலூர்: வேலூர் மண்டல மத்திய கலால் பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் போலீசார் நேற்று காட்பாடி அடுத்த முத்தரசிக்குப்பம் சோதனைச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சித்தூரில் இருந்து வந்த ஆந்திர மாநில அரசு பஸ்சில் சோதனை நடத்தினர். அதில் ஒரு பெண் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 5 கவர்களில் 10 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த லதா(44), சித்தூரில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது. அவரிடமிருந்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, வேலூர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்….

The post பஸ்சில் 10 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Vellore ,Vellore Zone Central Excise Division ,Inspector ,Elango ,Muttharashikuppam ,
× RELATED தாறுமாறாக ஓடிய கார், பைக் மீது மோதல்; வேலூரை சேர்ந்த 3 பேர் மீது வழக்கு