×

வண்ணாரப்பேட்டையில் காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டையில் காதல் தோல்வியால் ஏற்பட்ட மன உளைச்சலில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வண்ணாரப்பேட்டை, சஞ்சீவிராயன் கோயில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்(25). போட்டோகிராபர், அதே பகுதியில் உள்ள கப்பல்போலு செட்டி தெருவில் போட்டோ ஸ்டூடியோவில் கடந்த 10 வருடங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருடன் வேலை பார்த்த 3 பேரும் இரவு நேரங்களில் தனித்தனியே படுத்து தூங்குவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் சாப்பிட்டு சென்ற விக்னேஷ், ஸ்டூடியோவில் இரவு நேரத்தில் தூங்கியுள்ளார். நேற்று காலை சக ஊழியர்கள் பார்த்தபோது, ஸ்டூடியோவில் விக்னேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. தகவலறிந்த தண்டையார்பேட்டை இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் தலைமையில் போலீசார் வந்து விக்னேஷின் சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த பெண்ணை கடந்த சில மாதங்களாக விக்னேஷ் காதலித்து வந்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் அப்பெண் விக்னேஷின் காதலை நிராகரித்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட காதல் தோல்வியால் விக்னேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. பல்லாவரம் அடுத்த திரிசூலம் வைத்தியர் தெருவை சேர்ந்தவர் ராம்ராஜ். சென்னை மெட்ரோ ரயில்நிலைய கட்டிடப் பணியில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 2வது மகள் முத்துலட்சுமி (27). இவருக்கு, கடந்த 2019ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த மணி (35) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தச்சுவேலை செய்து வந்த மணி, குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்த 6 மாதத்திலேயே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முத்துலட்சுமி கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த முத்துலட்சுமி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. புகாரின்பேரில் பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு மாயமான முத்துலட்சுமியை தேடினர். இதனிடையே, அதே பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் பெண் ஒருவரின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார், பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரித்தபோது மாயமான முத்துலட்சுமி என்பது தெரியவந்தது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பினர். விசாரணையில், வழக்கம்போல் தாயும், தந்தையும் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுள்ளனர். அந்தநேரத்தில் தனது நகைகளை வீட்டில் கழற்றிவைத்துவிட்டு கல்குவாரி குட்டையில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் அவர் தற்கொலை குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்….

The post வண்ணாரப்பேட்டையில் காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Vannarpettai ,Thandaiyarpet ,Vannarpet ,Vannarappet ,Sanjeevirayan ,Temple ,
× RELATED மாநகர பேருந்து படியில் பயணம்; ‘உள்ளே...