×

அமெரிக்காவில் துப்பாக்கிகள் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை உயர்த்தும் வகையில் சட்டம் நிறைவேற்றம்..!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் துப்பாக்கிகள் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை உயர்த்தும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவில் சமீபகாலமாக பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு டெக்சாசில் உள்ள  ராப் தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு முன்பு, டெக்சாசில் உள்ள பப்பல்லோ பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 கருப்பின மக்கள் கொல்லப்பட்டனர். தொடர்ச்சியாக ஓக்லஹோமாமாகாணம், துல்சா நகரில் உள்ள புனித பிரான்சிஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள நடாலி கட்டிடத்தில் புகுந்த மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பலியாகினர். அமெரிக்காவில் அடுத்தடுத்து பள்ளிகள், பொது இடங்களில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுடுவதால் அப்பாவிகள் பலியாகின்றனர். சிறுவர்கள் கையில் துப்பாக்கிகள் கிடைப்பதை தடுக்க வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில் மசோதா நிறைவேறியுள்ளது. துப்பாக்கி வாங்குவோர் அவற்றை வீட்டில் சிறுவர்கள் கைக்கு கிடைக்காத வகையில் பாதுகாப்பாக வைப்பதையும் இந்த மசோதா உறுதி செய்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் ஜோ பைடன் , துப்பாக்கி உற்பத்தியாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் எனவும் இது யாருடைய உரிமையையும் பறிப்பதற்காக அல்ல எனவும் குறிப்பிட்டிருந்தார்….

The post அமெரிக்காவில் துப்பாக்கிகள் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை உயர்த்தும் வகையில் சட்டம் நிறைவேற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Washington ,US ,Dinakaran ,
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...