×

மது விற்ற பெண்ணிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய போலீஸ்: துணை ஆய்வாளர், தலைமை காவலர் பணியிடை நீக்கம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கள்ளத்தனமாக மது விற்ற பெண்ணை லஞ்சம் கேட்டு மிரட்டிய  துணை ஆய்வாளர் உள்பட 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்ததால் ஜாலிமேடு பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். அதை தொடர்ந்து முருகனின் மனைவி மாலா வீட்டில் வைத்து மதுபானம் விற்பனைசெய்து வந்துள்ளார். இந்நிலையில் மதுராந்தகம் மதுவிலக்கு காவல் நிலைய துணை ஆய்வாளர் வாசு, தலைமை காவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மாலா விடம் லஞ்சம் கேட்டு மிரட்டும் ஆடியோ வெளியானது. இது தொடர்பான புகாரில் லஞ்சம் பெற்ற காவலர்கள் 2 வரும் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.   …

The post மது விற்ற பெண்ணிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய போலீஸ்: துணை ஆய்வாளர், தலைமை காவலர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Madurandagam, Chengalpattu district ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...