×

வாலிபரிடம் பணம் பறிப்பு : 2 பேர் கைது

புழல்: சோழவரம் அருகே வாலிபரிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். சோழவரம் அருகே நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(32). இவர் சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சோழவரம் செங்காளம்மன் கோயில் அருகே தனது வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் அவரது வாகனம் மீது மோதினர். பின்னர் குறுக்கே தங்களது பைக்கை நிறுத்தி அவரை வழிமறித்தனர். பின்னர், அவரை சரமாரியாக தாக்கிவிட்டு அவரிடமிருந்த ரூ3 ஆயிரத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். புகாரின்பேரில் சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா  பதிவுகளின் அடிப்படையில் சோழவரம் பெரிய காலனி பகுதியை சேர்ந்த அஜித்குமார்(25) மற்றும் டில்லிபாபு(22) ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்….

The post வாலிபரிடம் பணம் பறிப்பு : 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Flush ,Cholhavaram ,Nedundam ,Cholavaram ,Dinakaran ,
× RELATED மூதாட்டியிடம் செயின் பறிப்பு