×

உத்தமபாளையம் அரசு கொள்முதல் நிலையத்தில் மழைக்கு நனையும் நெல் மூட்டைகள்-நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் அலட்சியம்

உத்தமபாளையம் : உத்தமபாளையம் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் வாங்கிய நெல் மூட்டைகள் மழையில் நனைவதாக புகார் எழுந்துள்ளது.கம்பம் பள்ளதாக்கில் உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, குச்சனூர் உள்ளிட்ட ஊர்களில் நெல் அறுவடை நடக்கிறது. இங்கு அறுவடையாகும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உத்தமபாளையத்தில்  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அரசு நேரடிக் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. தற்போது உத்தமபாளையம், சின்னமனூர் மற்றும்  அதனை சுற்றியுள்ள பகுதியில் முதல் போக நெல் அறுவடைப் பணிகள் நடைபெறுகிறது. இதையடுத்து  விவசாயிகள் பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் வைத்துள்ளனர்.இடவசதி இருந்தாலும்,  கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வசதியில்லாத காரணத்தால் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகி வருகிறது.  திறந்த வெளி என்பதால் நெல் மூடைகளை  சேதமாகி வருகிறது.எனவே, நெல்முடைகள் திறந்த வெளியில் கிடக்கிறது. இதனை நிர்வகிக்க கூடிய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் நெல் கொள்முதல் நிலையத்திற்கே வருவதில்லை. இதனால் நெல்மூட்டைகள் நளைகின்றன. எனவே, உத்தமபாளையம் பகுதியில்  விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க நிரந்தரமான இடத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வியாபாரிகள் ஆதிக்கம் உத்தமபாளையம் நெல்கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகள் நுழைந்து, விவசாயிகளிடம் வாங்கப்பட்ட நெல் மூட்டைகளை விற்பதாகவும், இவர்களுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்….

The post உத்தமபாளையம் அரசு கொள்முதல் நிலையத்தில் மழைக்கு நனையும் நெல் மூட்டைகள்-நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் அலட்சியம் appeared first on Dinakaran.

Tags : Uttamapalayam ,Consumer Trade Corporation ,Uthampalayam ,Kambam Pallathak ,
× RELATED உத்தமபாளையத்தில் பஸ் மோதி தூய்மை பணியாளர் பலி