×

கோவை அருகே பைக்கில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது-21 கிலோ, ரூ.2 லட்சம் பறிமுதல்

பெ.நா.பாளையம் : துடியலூர் – சரவணம்பட்டி சாலையில் துடியலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மூட்டையுடன் சந்தேகம்படும்படி 2 பைக்கில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அவர்களிடம் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் அவர்கள் அருப்பு கோட்டை காட்டாங்குடியை சேர்ந்த லக்குசாமி (எ) காத்தாடி (24), புளியம்பட்டியை சேர்ந்த கூல் (எ) அஜீத் குமார் (24), நல்லூரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் எனவும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து கோவையில் பல பகுதிகளில் விற்பனை செய்து வருவதும், இதற்காக சூலூர் பாப்பம்பம்பட்டி பிரிவில் வீடு எடுத்து தங்கி  வருவதும் தெரியவந்தது. பின்னர் 3 பேரை போலீசார் கைது செய்து 21 கிலோ கஞ்சா, ரொக்கம் ரூ.2 லட்சம், 2 பைக்யைும் பறிமுதல் செய்தனர். லக்குசாமி, அஜீத்குமார் இருவர் மீதும் அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் வாகன திருட்டு வழக்குகள் உள்ளன. கஞ்சா கடத்தல் தகவல் கிடைத்ததும் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான தனிப்படை போலீசாரை மாவட்ட எஸ்பி பத்திரி நாராயணன், டிஎஸ்பி ராஜபாண்டியன் ஆகியோர் பாராட்டினர்….

The post கோவை அருகே பைக்கில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது-21 கிலோ, ரூ.2 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,B.N. Palayam ,Inspector ,Gnanasekaran ,Dudiyalur police station ,Thudiyalur – Saravanampatti road ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...