×

தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து காதலிக்கு மிரட்டல் விடுத்த காதலன் கைது

ஆவடி: தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து காதலியை மிரட்டிய காதலனை போலீசார் கைது செய்தனர்.ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண் அதேபகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பிச்சு என்பவரின் மகன் பிரதீப்(20). இவர் முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி டயாலிசிஸ் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களிடையே நட்பு ஏற்பட்டது. நாளடைவில், நட்பு காதலாக மாறியது. இதையடுத்து, அவர்கள் பலமுறை தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, தனது காதலிக்கு தெரியாமல் அதை பிரதீப் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். இந்நிலையில், பிரதீப் இந்த வீடியோக்களை  தனது காதலியிடம் காண்பித்து வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அதை வெளியிடுவதாக  தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் இதுகுறித்து,  கடந்த வாரம் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனையடுத்து, ஆவடி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் லதா 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினார்.பின்னர்,  பிரதீப் வைத்திருக்கும் வீடியோக்களை அழிக்குமாறு கூறி   இருவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால், பிரதீப் மீண்டும் தனது காதலியை வீடியோக்களை காட்டி மிரட்டி வந்ததார்.இதனால், அதிர்ச்சியடைந்த அவர்  கடந்த 4ம் தேதி ஆவடி துணை ஆணையர் மகேஷிடம் புகாரளித்தார். அதன் அடிப்படையில், ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பிரதீப்பை நேற்று முன்தினம்  கைது செய்தனர். பின்னர், நேற்று அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். …

The post தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து காதலிக்கு மிரட்டல் விடுத்த காதலன் கைது appeared first on Dinakaran.

Tags : Avadi ,Veerapuram ,
× RELATED பைக்குக்கு மாத தவணை செலுத்த பெற்றோர்...