×

கலைஞரின் பிறந்த நாளன்று அரசு மருத்துவமனையில் பிறந்த 26 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: அமைச்சர் தா.மோ. அன்பரசன் அணிவித்தார்

செங்கல்பட்டு: கலைஞர் மு.கருணாநிதியின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முதல் தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு வேட்டிசேலை,அன்னதானம் வழங்குதல், என பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக, செங்கல்பட்டு நகர இளைஞர் அணி சார்பில், செங்கல்பட்டு நகர செயலாளர் ச.நரேந்திரன் தலைமையில் நகராட்சி மண்டபத்தில் இலவச ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்த  தானம் வழங்கினர். குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கினார். அதனைதொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று கலைஞர் பிறந்தநாளன்று பிறந்த 26 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கினார். இதில், காஞ்சிபுரம் எம்பி செல்வம், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், நகர்மன்ற தலைவர்கள் எம்கேடி. கார்த்திக் தண்டபாணி, தேன்மொழி நரேந்திரன் நகராட்சி துனைத்தலைவர் அன்புச்செல்வன், நகர இளைஞர் அணி அமைப்பாளர் சந்தோஷ் துனை அமைப்பாளர்கள் மணிகண்டன், ராஜா, சதிஸ் மாணவரணி அமைப்பாளர் மாலிக் நகர நிர்வாகிககள் ராஜி திருவள்ளுவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்….

The post கலைஞரின் பிறந்த நாளன்று அரசு மருத்துவமனையில் பிறந்த 26 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: அமைச்சர் தா.மோ. அன்பரசன் அணிவித்தார் appeared first on Dinakaran.

Tags : Minister Tha.Mo ,Anbarasan ,Chengalpattu ,M. Karunanidhi ,Tamil Nadu ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...