×

கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்த பள்ளி மாணவன் பலி

ஊத்துக்கோட்டை, : ஊத்துக்கோட்டை அடுத்த அந்தேரி கிராமம் சாணார் தெருவை சேர்ந்த  ரமேஷ். இவரது மகன்  பூபதி (14). அந்தேரி கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், பூபதி கடந்த 2 தினங்களுக்கு முன்பு இயற்கை உபாதையை கழிக்க சென்றபேது, கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்துள்ளார். இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், பென்னலூர்பேட்டை போலீசாருக்கும், திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தேடியும் மாணவன் கிடைக்கவில்லை. இதனையடுத்து, 2 நாள் கழித்து பூண்டி ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார். மாணவரின் உடலை பென்னலூர்பேட்டை போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

The post கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்த பள்ளி மாணவன் பலி appeared first on Dinakaran.

Tags : Krishna canal ,Oothukottai ,Ramesh ,Chanar Street, Andheri ,Bhupathi ,Andheri ,
× RELATED கடை ஊழியர் மீது சரமாரி தாக்குதல்: வாலிபர் கைது