×

ரூ1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டை வேர்கள் சிக்கியது: கடத்திய 4 பேர் கைது

திருத்தணி : திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட சித்துார் சாலை பகுதியில் வசிப்பவர் வஜ்ஜிரவேலு மனைவி ராணி ( 65). வஜ்ஜிரவேலு வனத்துறை அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். வஜ்ஜிரவேலுக்கு சொந்தமான விவசாய நிலம் தாழவேடு கிராமத்தில் இருக்கிறது. அந்நிலத்தில் அரசு அனுமதி பெற்று செம்மரம் வளர்த்து வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை அனுமதி பெற்று செம்மரம் வெட்டி விற்பனை செய்துள்ளனர். இந்நிலையில் வெட்டபட்டு விற்பனை செய்யப்பட்ட   செம்மரத்தின் வேர்கள், உரிய அனுமதியின்றி தோண்டி எடுத்து அந்த தோட்டத்தில்  உள்ள ஷெட்டில் பதுக்கி வைத்திருந்தனர். செம்மரக்கட்டை வேர்கள் இருப்பதை அறிந்த ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கடம்பநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த செம்மரக்கட்டை புரோக்கர் சங்கர் (55) என்பவர் நிலத்தின் உரிமையாளர் ராணியிடம் செம்மர வேர்களை அதிக விலைக்கு விற்பனை செய்து தருவதாக கூறியுள்ளார். இதற்கு ராணி சம்மதம் தெரிவித்துள்ளார்.இடைத்தரகர் சங்கர் ஆந்திர மாநிலம், திருப்பதி பகுதியில் செம்மரக்கட்டை விற்பனை செய்யும் நபர்களான நாராயணவனம் பகுதியை சேர்ந்த துரைவேலு ( 52), திருப்பதி பகுதியை சேர்ந்த நாராயணரெட்டி ( 47), திருத்தணி அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டை சீனு ( 34) ஆகியோர் ஒன்று சேர்ந்து தாழவேடு பகுதியில் உள்ள செம்மர கட்டைகளை விற்பனை செய்ய திட்டமிட்டனர். இந்நிலையில் செம்மரக் கட்டை கடத்துவது குறித்து திருப்பதி செம்மரக்கடத்தல் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ரெட்டி, மாவட்ட வனச்சரக அலுவலர் நரசிம்மராவ் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.  பத்துக்கும் மேற்பட்ட போலீசார், தாழவேடு பகுதியில் உள்ள தோட்டத்தில் பதுங்கி இருந்தனர். செம்மரக் கட்டை கடத்தல்காரர்கள் நான்கு பேரும் செம்மர வேர்களை சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற போது ஆந்திர மாநில தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அரசு அனுமதியின்றி கடத்த முயன்றது தெரிய வந்தது. பின்னர் தகவலறிந்து விரைந்து சென்ற தமிழக போலீசார் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். கைப்பற்றப்பட்ட செம்மர வேர்கள் 4 டன் என்றும் இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.   …

The post ரூ1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டை வேர்கள் சிக்கியது: கடத்திய 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Vajjiravelu ,Rani ,Chittur Road ,Vajjiravelu… ,
× RELATED திருத்தணியில் சாலை விரிவாக்கப்பணிகள்...