×

அமெரிக்காவில் அரங்கேறும் தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் : ஓக்லஹோமா மருத்துவமனையில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் பலி!!

வாஷிங்டன் : அமெரிக்காவில் மருத்துவமனை ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணம் துல்சா நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் திடீரென நுழைந்தார். சிறிது நேரம் 2ம் தளத்தை நோட்டமிட்ட அவர், 2 துப்பாக்கிகளை எடுத்து கண்மூடித்தனமாக சுட்டார். இதில் 4 பேர் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சில நிமிடங்களில் விரைந்து வந்த காவல்துறையினர் அவரை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மர்ம நபர் தன்னை தானே சுட்டுக் கொன்று உயிரிழந்துவிட்டார். தாக்குதல் நடத்திய மர்ம நபர், சுமார் 40 வயதுடைய கருப்பினத்தவர் என்று தெரிவித்துள்ள காவல் துறையினர் அவரது அடையாளங்களை வைத்து விசாரித்து வருவதாக கூறியுள்ளனர். நிகழ்வு இடத்தில் இருந்து கைத் துப்பாக்கி ஒன்றையும் ரிவால்வர் ஒன்றையும் காவல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சமீபகாலமாக அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தடுக்க கடும் சட்டங்களை இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், தற்போது ஓக்லஹோமா மாகாணத்தில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. …

The post அமெரிக்காவில் அரங்கேறும் தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் : ஓக்லஹோமா மருத்துவமனையில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் பலி!! appeared first on Dinakaran.

Tags : US ,Oklahoma ,Washington ,United States ,Oklahoma, USA ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன...