×

ஜம்மு காஷ்மீரில் குண்டுவெடிப்பு ராணுவ வீரர்கள் 3 பேர் படுகாயம்

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் ராணுவ வீரர்கள் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு தனியார் வாகனத்தில் ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக வந்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஷோபியான் சேடோவில் நடந்த குண்டுவெடிப்பில் 3 வீரர்கள் காயமடைந்தனர். வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு தனியார் வாகனத்தில் பேட்டரி வெடித்ததால் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் மட்டத்தில் விசாரிக்க உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….

The post ஜம்மு காஷ்மீரில் குண்டுவெடிப்பு ராணுவ வீரர்கள் 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Jammu and ,Kashmir State Sophian ,Dinakaran ,
× RELATED 370வது பிரிவு ரத்துக்கு எதிரான மறுஆய்வு...