×

பெட்ரோல் தீர்ந்ததால் பைக்கை தள்ளி சென்ற வாலிபரை தாக்கி ரூ.2 லட்சம் 8 புதிய செல்போன் பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலை

அண்ணாநகர்: அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியை சேர்ந்தவர் ரகீம் (30). அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் ரூ.2 லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த 8 புதிய செல்போன்களுடன்  கோயம்பேடு – பூந்தமல்லி மெயின் ரோடு வழியாக பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். பெட்ரோல் இல்லாததால் நடுவழியில் பைக் நின்றது. இதனால், பைக்கை தள்ளிக்கொண்டு சென்றார். அப்போது, முகமூடி அணிந்தபடி இவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த 2 பேர், ரகீமை வழிமறித்து அவரிடம் இருந்து ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் 8 செல்போன்களை பறித்துள்ளனர். ஆனால், அவர் தர மறுத்து போராடியதால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், ரகீமை சரமாரியாக தாக்கி பணம், செல்போனை பறித்துக்கொண்டு, பைக்கில் தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

The post பெட்ரோல் தீர்ந்ததால் பைக்கை தள்ளி சென்ற வாலிபரை தாக்கி ரூ.2 லட்சம் 8 புதிய செல்போன் பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Rakim ,Arumbakkam MMDA ,
× RELATED வீட்டில் தூங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபருக்கு தர்ம அடி