×

பழநி கோயிலிலிருந்து சண்முகநதிக்கு டவுன் பஸ் இயக்க பக்தர்கள் கோரிக்கை

பழநி: பழநி அடிவாரத்திலிருந்து சண்முநதிக்கு டவுன் பஸ் இயக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பழநி நகரில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். மேலும், பழநி கோயிலுக்கு சராசரியாக நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஊருக்கு மேற்கே அமைந்துள்ள சண்முகநதியிலிருந்து, பழநி அடிவாரத்திற்கு மக்கள் சென்று வர டவுன் பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது. தற்போது இவ்வசதி நிறுத்தப்பட்டுள்ளது. ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். பழநி பஸ் நிலையத்தில் இருந்து சண்முகநதி மார்க்கமாக ஊருக்கு மேற்கே உள்ள கிராமங்களுக்கு சென்று வரும் டவுன் பஸ்களை காரமடை, ரதவீதிகள், மூலக்கடை, காந்தி மார்க்கெட், பேருந்து நிலையம், பாளையம், தேவர்சிலை, ஆண்டவன்பூங்கா வழியாக கிரிவீதியை சுற்றி வந்து, அய்யம்புள்ளி சாலை, வையாபுரி பைபாஸ் சாலை வழியாக காந்தி மார்க்கெட், மூலக்கடை, ரதவீதிகள் வழியாக சண்முகநதி செல்வதற்கு ஏற்ப வழித்தடங்கள் செய்து தந்தால் பழநி நகர மக்களுக்கும், பக்தர்களுக்கும் வசதியாக இருக்கும். எனவே, இவ்வழித்தடத்தில் பேருந்தை இயக்க வழிவகை செய்ய வேண்டும். இதுபோல் ரயில் நிலையத்தில் இருந்தும் பழநி கோயிலுக்கு அதிக எண்ணிக்கையில் டவுன் பஸ்கள் இயக்கப்பட வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

The post பழநி கோயிலிலிருந்து சண்முகநதிக்கு டவுன் பஸ் இயக்க பக்தர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Palani temple ,Shanmuganadi ,Palani ,Shanmunadi ,
× RELATED பழநி கோயில் பகுதியில் ஹெலிகேமராக்கள் பறக்க தடை விதிக்க வேண்டும்