×

பிதர்காடு காமராஜர் நகரில் பராமரிப்பின்றி புதர்கள் சூழ்ந்த கழிப்பறை

பந்தலூர்: பந்தலூர் அருகே பிதர்காடு காமராஜ் நகர் பகுதியில் பராமரிப்பு இல்லாமல் முற்புதர்கள் சூழ்ந்து காணப்படும்  கழிப்பறையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் பிதர்காடு காமராஜ் நகர் பகுதியில் பொது கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. தற்போது கழிப்பறையை  பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு பராமரிப்பு இல்லாமலும் ,முட்புதர்கள் சூழ்ந்தும் காணப்படுகிறது. இப்குதியில் வசித்து வரும் நூற்றுக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள கழிப்பறையை பொதுமக்கள் பயன்படுத்தாமல் இருப்பதால், மது அருந்துபவர்கள் மற்றும் சமூக விரோத செயலுக்கு சிலர் பயன்படுத்துவதாக தெரிகிறது. எனவே கழிப்பறையை உரிய முறையில் பராமரிப்பு செய்து பொதுமக்கள் பயன்படுத்துகின்ற அளவிற்கு மாற்றி ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது….

The post பிதர்காடு காமராஜர் நகரில் பராமரிப்பின்றி புதர்கள் சூழ்ந்த கழிப்பறை appeared first on Dinakaran.

Tags : Bidargad Kamaraj Nagar ,Bandalur ,Dinakaran ,
× RELATED கேரளாவில் இருந்து கொண்டு வந்த...