×

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காவலாளிக்கு 20 ஆண்டு சிறை

கோவை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட் நீதிபதி தீர்ப்பு கூறினார். கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் ரவிசந்திரன் (61). இவர் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் அப்பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதை கண்ட குடியிருப்புவாசிகள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவிசந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு கோவை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.  நீதிபதி குலசேகரன் நேற்று தீர்ப்பளித்தார்.  4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி ரவிசந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கவும் அவர் உத்தரவிட்டார்….

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை: காவலாளிக்கு 20 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Watchman ,Coimbatore ,Coimbatore Pocso Court ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...