×

பதிவு தபாலில் கோரிக்கை மனு அனுப்பிவிட்டு அதிகாரிகள் பரிசீலிக்க உத்தரவிட வழக்கு தொடருவது அதிகரிப்பு: ஐகோர்ட் கருத்து

சென்னை:  திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் உள்ள கோயில் ஒன்றில் தங்களை அறங்காவலர்களாக நியமிக்க கோரி இந்து சமய அறநிலையத்துறைக்கு அளித்த மனுவை பரிசீலிக்கும்படி உத்தரவிடக்கோரி பச்சமுத்து உள்ளிட்ட மூன்று பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது உரிய ஆவண ஆதாரங்களுடன் மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறைப்படி மனு அளிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அரசுக்கு கோரிக்கை மனுவை பதிவுத் தபாலில் அனுப்பி வைத்துவிட்டு அந்த கோரிக்கையை பரிசீலிக்கும்படி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்பது சமீபத்தில் அதிகரித்து வருகிறது. அந்த கோரிக்கை மனுக்களை பரிசீலிக்கும்படி உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவால், அதிகாரிகளிடம் தங்களுக்கு சாதகமான உத்தரவுகளை மனுதாரர்கள் பெற்று விடுகிறார்கள். இது ஊழலுக்கு சமமானதாகும். அதிகாரிகளின் பணிச்சுமையை கருத்தில் கொள்ளாமல் நூற்றுக்கணக்கான கோரிக்கை மனுக்களை அனுப்பும் போது, அதன்மீது குறித்த காலத்திற்குள் உத்தரவுகளை பிறப்பிக்க இயலாது. கோரிக்கை மனுக்களை பரிசீலிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு பயந்து, கோரிக்கை மனுக்கள் மீது அவசரகதியில்  உத்தரவு பிறப்பிக்கும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்….

The post பதிவு தபாலில் கோரிக்கை மனு அனுப்பிவிட்டு அதிகாரிகள் பரிசீலிக்க உத்தரவிட வழக்கு தொடருவது அதிகரிப்பு: ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kalasappakkam, Tiruvannamalai district ,Hindu Religious Charities Department ,
× RELATED தஞ்சை பெருவுடையார் கோயிலை சிதைக்கும்...