×

மயக்க மருந்து தந்து விட்டு கழுத்தறுத்து கொன்றாரா? என விசாரணை நடக்கிறது: பொழிச்சலூர் கொலை தொடர்பாக காவல் ஆணையர் ரவி விளக்கம்..!!

சென்னை: சென்னை பல்லாவரத்தை  அடுத்த பொழிச்சலூரில் கடன் தொல்லையால் மனைவி, மகன், மகளை கொலை செய்த நபர், தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொழிச்சலூர் அருகே குடும்பத்தினரை கொன்று ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்துகொண்டதாக தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையர் ரவி விளக்கம் அளித்துள்ளார். அதில், கடிதம் எழுதிவைத்து அதை சுவற்றில் ஒட்டிவிட்டு இறந்துள்ளனர்; சாவுக்கு யாரும் காரணம் இல்லை என கடிதத்தில் உள்ளது. மின் ரம்பத்தை ஆர்டர் செய்து கடந்த 19ம் தேதி ஆன்லைனில் பெற்றுள்ளனர். செல்போனை கைப்பற்றி ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளோம். தடயவியல் துறையினர் கொலை தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். இரவு 11 மணிக்கு மேல் கொலை சம்பவம் நடந்திருக்க வாய்ப்புள்ளது; பிரேதப் பரிசோதனைக்கு பிறகே சரியான நேரம் தெரியவரும். கொலை, தற்கொலை நடந்த வீடு முழுவதும் ரத்த மயமாக உள்ளது. ரத்தத்தின் நடுவே பதிந்த கால் தடம் யாருடையது? என விசாரணை செய்து வருகிறோம். மயக்க மருந்து கொடுத்து கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது; ரூ.3.50 லட்சம் கடன் பத்திரம் கிடைத்துள்ளது. கடன் பிரச்சனையா? கடன் கொடுத்தவர்கள் தொல்லை தந்தார்களா? மிரட்டல் இருக்கிறதா? என்பது விசாரணைக்கு பின்பே தெரியும். …

The post மயக்க மருந்து தந்து விட்டு கழுத்தறுத்து கொன்றாரா? என விசாரணை நடக்கிறது: பொழிச்சலூர் கொலை தொடர்பாக காவல் ஆணையர் ரவி விளக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Police Minister ,Ravi ,Chennai ,Chennai Pallavaratam ,Pozichalur ,Pozhichalur ,
× RELATED ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக...