×

பிறந்த குழந்தையை முட்புதரில் வீசிச் சென்ற கொடூரம்: அழுகுரல் கேட்டு பச்சிளங்குழந்தையை மீட்ட கிராம மக்கள்..!

திருச்சி: மணப்பாறை அருகே தனக்கு தானே மகப்பேறு மார்த்துக் கொண்ட பெண் ஒருவர் பிறந்த குழந்தையை முட்புதரில் வீசிச் சென்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. ஆண்டவர் கோவில் மான்பூண்டி ஆற்றில் தொப்புள் கொடியோடு பெண் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் குழந்தையை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அருகே இருந்த கோவிலில் படுத்திருந்த பெண்ணிடம் விசாரித்துள்ளனர். இனாம்ரெட்டிபட்டியை சேர்ந்த சசிகலா என்பதும், குழந்தையின் தாய் அவர் தான் என்றும் தெரிய வந்துள்ளது. சசிகலாவிற்கு ஏற்கனவே 8 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கணவர் இறந்த நிலையில் திருமணத்தை தாண்டிய உறவின் மூலம் குழந்தை உருவாகியுள்ளது. உறவினர்கள் இதனை ஏற்காததால் வீட்டை விட்டு வெளியே வந்த போது பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் தனக்கு தானே மகப்பேறு பார்த்துக் கொண்டு குழந்தையை முட்புதரில் வீசியது விசாரணையில் தெரிய வந்தது. காயங்களுடன் இருந்த தாயை மீட்ட போலீசார் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். …

The post பிறந்த குழந்தையை முட்புதரில் வீசிச் சென்ற கொடூரம்: அழுகுரல் கேட்டு பச்சிளங்குழந்தையை மீட்ட கிராம மக்கள்..! appeared first on Dinakaran.

Tags : mudpurthar ,Trichy ,Manipara ,Muthaputhar ,Pachlankulna ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...