×

உ.பி. சுடுகாட்டு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு!: ரூ.15 லட்சம் நிவாரணம் கோரி உறவினர்கள் திரண்டு போராட்டம்..!!

லக்னோ: உத்திரபிரதேசத்தில் சுடுகாடு கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 – ஆக அதிகரித்துள்ளது. 15 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கக்கோரி உறவினர்கள் நடத்திய போராட்டத்தால் பதற்றமும், பரபரப்பும் உருவானது. காசியாபாத் மாவட்டம் முராத் நகரில் நேற்று முதியவர் ஒருவரது உடல் தகனத்தின் போது சுடுகாட்டு கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. மழை காரணமாக கட்டிடத்தின் கீழே ஒதுங்கியிருந்த பலரும் இந்த பயங்கர விபத்தில் சிக்கினர். இது குறித்து போலீசாருக்கும் மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். மோப்ப நாய் உதவியுடனும் சடலங்கள் மீட்கப்பட்டன. இடிபாடுகளில் சிக்கி 23 பேர் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் மேலும் இருவர் மரணமடைந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு 15 லட்சம் ரூபாய் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கக்கோரி டெல்லி மீரட் சாலையை மறித்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இளநிலை பொறியாளர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ள உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சம்பவம் தொடர்பாக மீரட் காவல் ஆணையர் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். …

The post உ.பி. சுடுகாட்டு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு!: ரூ.15 லட்சம் நிவாரணம் கோரி உறவினர்கள் திரண்டு போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Lucknow ,Uttar Pradesh ,
× RELATED கை, கால்களை கட்டிப்போட்டு கணவருக்கு...