×

35 ஆண்டுகளாக சிறையில் உள்ள வீரப்பன் அண்ணன் மாதையன் சீரியஸ்: சேலம் ஜி.ஹெச்சில் தீவிர சிகிச்சை

சேலம்: வீரப்பனின் அண்ணன் மாதையன் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் (75). இவர் கடந்த 1987ல் சத்தியமங்கலத்தில் ரேஞ்சர் சிதம்பரம் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவர், கடந்த 35 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். இவரை விடுதலை செய்ய வேண்டும் என சில அரசியல் கட்சியினர் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மாதையன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பரோலில் சென்று திரும்பினார். மீண்டும் மாதையனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்….

The post 35 ஆண்டுகளாக சிறையில் உள்ள வீரப்பன் அண்ணன் மாதையன் சீரியஸ்: சேலம் ஜி.ஹெச்சில் தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Veerappan Annan Mathayan ,Salem GH ,Salem ,Veerappan ,Matayan ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...