×

கதையின் நாயகனாக நடிப்பது பிடித்துள்ளது: அப்புக்குட்டி

சென்னை: சுசீந்திரன் இயக்கிய ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் கதையின் நாயகனாக நடித்து, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர், நகைச்சுவை நடிகர் அப்புக்குட்டி. தற்போது அவர் கதையின் நாயகனாக சில படங்களில் நடிக்கிறார். இதில் ‘வாழ்க விவசாயி’, ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வருகின்றன. இதுகுறித்து அப்புக்குட்டி கூறுகையில், ‘நிறைய வெற்றிப் படங்களில் நடித்துள்ள நான், தற்போது பால் டிப்போ கதிரேசன் தயாரிப்பில், பி.எல்.பொன்னி மோகன் இயக்கியுள்ள ‘வாழ்க விவசாயி’ படத்தில் கதையின் நாயகனாக, விவசாயியாக நடித்துள்ளேன்.

எனது நடிப்பைப் பார்த்த படக்குழுவினர், மீண்டும் எனக்கு விருது கிடைக்கும் என்று சொல்கின்றனர். எனது ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். அடுத்து ராஜூ சந்திரா இயக்கத்தில் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ படத்தில் கதையின் நாயகனாக, மிகவும் யதார்த்தமாக நடித்துள்ளேன். இதுபோல் கதையின் நாயகனாக, அதாவது, படத்தின் கதைக்கேற்ற நாயகனாக நடிப்பது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. என்றாலும், தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடி வேடத்தில் நடிக்கவும் விரும்புகிறேன்’ என்றார்.

 

The post கதையின் நாயகனாக நடிப்பது பிடித்துள்ளது: அப்புக்குட்டி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Appukkutty ,CHENNAI ,Sucheenthran ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...