×

விஜயகாந்த் அறிக்கை தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் தமிழர்களுக்கு கிடைத்த பெருமை

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: இத்தாலியின் வாடிகனில் உள்ள கத்தோலிக்க திருச்சபையில் கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் கிராமத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார், என்ற செய்தி கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். புனிதர் பட்டம் பெற்ற தேவசகாயம் தமிழகத்தை சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர், இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் பிறந்தது நம் அனைவருக்கும் கூடுதல் பெருமை. மேலும் இத்தாலியில் முதல் முறையாக தமிழ் தாய் வாழ்த்து ஒலித்துள்ளது. இது உலகம் முழுவதும் வாழும் ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் கிடைத்த பெருமை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post விஜயகாந்த் அறிக்கை தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் தமிழர்களுக்கு கிடைத்த பெருமை appeared first on Dinakaran.

Tags : vijayakanth ,tamils ,Chennai ,President ,Kanyakumari ,Natalam ,Catholic Church ,Vatican, Italy ,
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!