×

பெரியபாளையம் அருகே 72 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா; அமைச்சர் நாசர் வழங்கினார்: எம்எல்ஏ கோவிந்தராஜன் பங்கேற்பு

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம், பெரியாளையம் அடுத்த அத்தங்கி காவனூர் ஊராட்சியை சேர்ந்த 72 ஏழை, எளிய பயனாளிகளுக்கு ₹ 2 கோடியே 16 லட்சம் மதிப்பபீட்டில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி கன்னிகைபேரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதற்கு, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். இதில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்டு 72 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.பின்னர், அமைச்சர் நாசர் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்க வழிவகை செய்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகவும், நம்பர் ஒன் முதலமைச்சராகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கின்றார். அரசு பேருந்துகளில் மகளிர்களுக்கு இலவச பயணம் சிறப்பு வாய்ந்த திட்டம்’ என்றார்.இதில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சத்தியவேலு, ஊராட்சி செயலாளர் வெங்கடாசலம், வருவாய்த்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்….

The post பெரியபாளையம் அருகே 72 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா; அமைச்சர் நாசர் வழங்கினார்: எம்எல்ஏ கோவிந்தராஜன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,Minister ,Nassar ,MLA ,Govindarajan ,Oothukottai ,Periyalayam ,Athangi Kavanur Panchayat, Thiruvallur District ,Nasser ,
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய...