×

சென்னையில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை: மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசார் விசாரணை

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை சேர்ந்த சந்திரஹாசன்-கௌரி தம்பதியினரின் 3-வது மகள், அங்குள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி முடிந்ததும் டியூசனுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய மாணவி, பெற்றோர் வெளியில் சென்றிருந்த நிலையில், கதவை தாழிட்டு விட்டு, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கேஸ் விநியோகிப்பாளர் கதவை தட்டியும் திறக்காததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக வீட்டிற்கு சென்ற பெற்றோர், கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய மாணவியை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மாணவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மாணவியின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளதால், அவரது பாடப்புத்தகங்கள் மற்றும் செல்போன் ஆகியவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.     …

The post சென்னையில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை: மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Raja Annamalaipuram, ,Raja ,
× RELATED சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள...