×

வீராங்கனையிடம் அத்துமீறல்

சென்னை: ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் நிவேதிதா ஜெஸ்ஸிகா. தேசிய மோட்டார் சைக்கிள் சாம்பியனாக 2 முறை பட்டம் வென்றவர். இவர், சென்னை காவல்துறை டிவிட்டர் பக்கத்தில் புகாரளித்துள்ளார். அதில், `நேற்று முன்தினம் இரவு அண்ணா நகரில் இருந்து வேலையை முடித்துவிட்டு எனது பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது கருப்பு பேண்ட் மற்றும் வெள்ளை சட்டை அணிந்த நபர் அசோக் பில்லர் பகுதியில் இருந்து ஆலந்தூர் வரை என்னை பின்தொடர்ந்து வந்து என்னிடம் தவறாக நடக்க முயன்றார். மேலும் என்னை மிரட்டினார்’ என்று கூறியிருந்தார். புகாரின்படி ஆதம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்….

The post வீராங்கனையிடம் அத்துமீறல் appeared first on Dinakaran.

Tags : chennai ,nivetitha jessica ,ambakkam ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!