×

ரியல் எஸ்டேட் அதிபர் காருடன் எரித்து கொலை? போலீஸ் விசாரணை

சென்னை:அம்பத்தூர் அடுத்த அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(62), ஓய்வுபெற்ற இந்தியன் ஆயில் நிறுவன ஊழியர்.  மனைவி, மகன்களை பிரிந்து தனியாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், இவருக்கு சொந்தமான கார் திருவள்ளூர் அடுத்த பாப்பரம்பாக்கம் கிராம ஒதுக்குப்புறத்தில் எரிந்த நிலையில் கிடந்தது. அந்த காரின் அருகே ஒரு ஆணின் சடலம் எரிந்த நிலையில் இருப்பதாக மணவாளநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் உத்தரவின்பேரில் மணவாளநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, காரின் அருகே எரிந்த நிலையில் இருந்தது காரின் உரிமையாளர் குணசேகரன் என உறுதி செய்யப்பட்டது. பிறகு அவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து காரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கார் எரிந்ததா அல்லது தொழில் போட்டியால் யாரேனும் காரில் வைத்து குணசேகரனை எரித்து கொலை செய்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post ரியல் எஸ்டேட் அதிபர் காருடன் எரித்து கொலை? போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Gunasekaran ,Indian Oil Company ,Ayanambakkam ,Ampathur ,Dinakaran ,
× RELATED திருமணம் செய்துகொள்ள மறுப்பு...