×

போச்சம்பள்ளி, ஊத்தங்கரையில் கனமழை சூறைக்காற்றுக்கு ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து நாசம்-மின்னல் தாக்கி 2 ஆடுகள் பலி

போச்சம்பள்ளி : போச்சம்பள்ளி, ஊத்தங்கரையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்தது. மேலும், மின்னல் தாக்கியதில் 2ஆடுகள் உயிரிழந்தன.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பகல் நேரங்களில் கோடை வெயில் சட்டெரிக்கும் நிலையில்,  மாலை மற்றும் இரவு நேரங்களில் சூறைக்காற்றுடன் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மாலை 5.30 மணியளவில் தொடங்கிய மழை, 2 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு சந்தூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலை கூட்ரோடு பகுதியில், 2 புளியமரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று காலை, அந்த மரங்களை அகற்றும் பணி நடந்தது.மாக்கிரெட்டிகொட்டாய் பகுதியை சேர்ந்த ஆனந்தன் வளர்த்து வரும் 2 ஆடுகள், மழை பெய்த போது மின்னல் தாக்கி உயிரிழந்தன. சூறைக்காற்றுக்கு போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில், தோப்புகளில் உள்ள மாமரங்களில் இருந்து 25 டன் மாங்காய்கள் உதிர்ந்து வீணானது. பூங்கம்பட்டி பகுதியில் 6 மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன. இதில், பழனியம்மாள் என்பவரின் வீட்டின் மீது, மின்கம்பம் விழுந்ததில் ஓடுகள் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் காயமின்றி தப்பினர். உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, நேற்று காலை சேதமான மின்கம்பங்களை சீரமைக்கும் பணி நடந்தது. இதேபோல், ஊத்தங்கரை அடுத்த கானம்பட்டி கிராமத்தில், நேற்று முன்தினம் வீசிய சூறைக்காற்றுக்கு, செல்வம் என்பவரது தோட்டத்தில் பயிரிட்டிருந்த 300க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து முற்றிலும் சேதமடைந்தன. இன்னும் ஒரு மாத காலத்தில், அறுவடைக்கு தயாராக இருந்த வாழை தார்கள் முறிந்து சேதமானது.அதே போல், ஊத்தங்கரை, காரப்பட்டு, முத்தாகவுண்டனூர், வளத்தானூர், வடுகனூர், சின்னக்காரப்பட்டு, ஊமையனூர் என சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்து நாசமானது. நேற்று காலை நிலவரப்படி, மாவட்டத்தில் பதிவான மழை அளவு(மில்லி மீட்டரில்): ஊத்தங்கரை 33.60, பாரூர் 31.40, நெடுங்கல் 19, போச்சம்பள்ளி 15.40, ஓசூர் 14, அஞ்செட்டி 5.40, தேன்கனிக்கோட்டை 5, தளி 5, சூளகிரி 4, பெணுகோண்டாபுரம் 3.20 என மொத்தம் 136மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது….

The post போச்சம்பள்ளி, ஊத்தங்கரையில் கனமழை சூறைக்காற்றுக்கு ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து நாசம்-மின்னல் தாக்கி 2 ஆடுகள் பலி appeared first on Dinakaran.

Tags : Pochampalli, Uthankaram ,Pochampalli ,Pochampalli, Uthankara ,Pochampalli, Uthankaran ,Dinakaran ,
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...