×

பூவிருந்தவல்லியில் ராட்சத பேனர் மின்கம்பி மீது விழுந்ததால் பரபரப்பு

பூவிருந்தவல்லி: பூவிருந்தவல்லியில் ராட்சத பேனர் மின்கம்பி மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசாணி புயல் காரணமாக தமிழகத்தில் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது இதையடுத்து நள்ளிரவில் இருந்து சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கனமழை பெய்தது. காற்று பலமாக வீசியதால் சென்னை – பெங்களூரு தேசிய நெடுசாலையில் சாலை ஓரமாக வைக்கப்பட்டுள்ள ராட்சத பேனர் கிழிந்து அருகே உள்ள மின்கம்பி மீது விழுந்தது. இதனால் அங்கு தீப்பொறி பறந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்த மக்கள் பூவிருந்தவல்லி மின் வாரியத்திற்கு தகவல் அளித்தனர் அதன்பிறகு உடனடியாக அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது. சாலையோரம் பேனர்கள் வைக்க கூடாது என்று உய்ரநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்த பேனர்களை அகற்றபட்டது ஆனால் ஒரு சில பகுதிகளில் அகற்றபடாமல் இருப்பதால் இது போன்று விபத்துகள் ஏற்படுகின்றது. …

The post பூவிருந்தவல்லியில் ராட்சத பேனர் மின்கம்பி மீது விழுந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Stir ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...