×

மொட்டை மாடியில் தூக்க கலக்கத்தில் உருண்டபோது மாடியில் இருந்து விழுந்து தொழிலதிபர் பரிதாப சாவு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே குன்னவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் (45). தொழிலதிபர். இவரது வீட்டின் ஒரு பகுதியில் ஹாலோபிளாக் தயாரித்து விற்பனை செய்து வந்தார். இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு 13 மற்றும் 8 வயதில் 2 மகன்கள் உள்ளனர். மனோகரனின்  வீட்டு முதல் மாடி, தடுப்பு சுவர் இல்லாமல் தளமாக உள்ளது. அங்கு தினமும், அவர் இரவில் தூங்குவது வழக்கம். இவர்களது வீட்டில் நாய் வளர்க்கின்றனர். சமீபத்தில் நாய் குட்டி போட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மனோகரன் சாப்பிட்டு முடித்து, மாடிக்கு தூங்க சென்றார். காலையில், மனைவி எழுந்து வெளியே வந்து பார்த்தபோது, மனோகரன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்டதும், அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.தகவலறிந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அந்தவேளையில், பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில், தூக்க கலக்கத்தில் மனோகரன், மாடியில் இருந்து உருண்டு கீழே விழுந்துள்ளார். அவரது உடலில் இருந்து வெளியேறிய ரத்தத்தை ருசி பார்த்த நாய் குட்டிகள், அவரது முகம், காது, கை, கால் என உடல் முழுவதும் கடித்து குதறியது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர். இதற்கிடையில், மனோகரன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததால், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. மேலும், வீட்டை சுற்றிலும் கிடைத் தடயங்களை சேகரித்து கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினர். அந்த நேரத்தில், கொலை இல்லை என மருத்துவ அறிக்கை வந்ததால், போலீசார் நிம்மதி அடைந்தனர்….

The post மொட்டை மாடியில் தூக்க கலக்கத்தில் உருண்டபோது மாடியில் இருந்து விழுந்து தொழிலதிபர் பரிதாப சாவு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Manokaran ,Gunnavakkam ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு படாளம் அருகே கார் மீது...