அண்ணாநகர்: கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளன. இதில் பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் நீர்மோர் வழங்கப்படுகிறது. அதன்டி, கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் முன்பு, கடந்த மாதம் தண்ணீர் பந்தலை அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார். இந்நிலையில், இந்த தண்ணீர் பந்தலை நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் தீயிட்டு எரித்துவிட்டு தப்பி சென்றனர். தகவலறிந்து கோயம்பேடு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். அதற்குள் அந்த பந்தல் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்….
The post கோயம்பேட்டில் பிரேமலதா திறந்துவைத்த தேமுதிக தண்ணீர் பந்தல் எரிப்பு: மர்ம நபர்களுக்கு வலை appeared first on Dinakaran.
