×

நெல்லையில் பயங்கரம் 90 வயது பாட்டியை பராமரிக்க முடியாமல் எரித்துக் கொன்ற பேத்திகள்

பேட்டை: நெல்லை பேட்டை ஆதம்நகர் எதிரே சாலையோரம் கடந்த 3ம் தேதி மதியம் பெண் சடலம் ஒன்று தீயில் எரிந்து கொண்டிருந்தது. தகவலறிந்து விரைந்து வந்த பேட்டை போலீசார், தீயை அணைத்து உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகின. அதன் விவரம்:  தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டவர் பழைய பேட்டை கிருஷ்ணப்பேரியைச் சேர்ந்த சுப்பம்மாள் (90). இவரை மகள் சொர்ணம் வழிப்பேத்திகளான மாரியம்மாள், மேரி ஆகிய இருவரும் முறை வைத்து பராமரித்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் பேட்டை செக்கடி பகுதியில் வசிக்கும் மேரி, தன்னால் பராமரிக்க இயலவில்லை எனக்கூறி பழைய பேட்டை கிருஷ்ணபேரியில் உள்ள அக்காள் மாரியம்மாளின் வீட்டில் விட்டுச்  சென்றார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுப்பம்மாள், நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். இந்நிலையில், அவரை பராமரிக்க முடியாத பேத்திகள் இருவரும் அவரை கொல்ல முடிவு செய்தனர். சம்பவத்தன்று பாட்டியை ஆட்டோவில் ஏற்றி ஆதம் நகர் அருகே வந்ததும் இறங்கினர். பின்னர் மாரியம்மாள், மூதாட்டியை போர்வையை தலையணையாக வைத்து படுக்க வைத்துள்ளார். பெட்ரோலை மூதாட்டியின் உடலில் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். பின்னர் ஆட்டோவை மீண்டும் வரவழைத்து அதில் ஏறி வீட்டிற்கு சென்றார். இதற்கு உடந்தையாகச் செயல்பட்ட மேரி பேட்டை செக்கடியில் உள்ள வீட்டிற்கு நடந்தே சென்றுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்….

The post நெல்லையில் பயங்கரம் 90 வயது பாட்டியை பராமரிக்க முடியாமல் எரித்துக் கொன்ற பேத்திகள் appeared first on Dinakaran.

Tags : Nella ,Pettah ,Adham Nagar ,Nella Pett ,
× RELATED நெல்லை அம்பாசமுத்திரம் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது