×

.உயர் நீதிமன்ற கோடை விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் நியமனம்: ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் அறிவிப்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை பதிவாளர் கே.கோவிந்தராஜன் திலகவதி வெளியிட்டுள்ள அறிவிப்பாணை: சென்னை உயர் நீதிமன்ற விடுமுறை மே 2 முதல் ஒரு மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடுமுறை காலத்தில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிக்க 20 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மே முதல் வாரம் மட்டும் திங்கட்கிழமை மற்றும்  புதன்கிழமை மனுதாக்கல் செய்யலாம். அவை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையில் விசாரிக்கப்படும். மே மாதத்தின் பிற வாரங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மனுதாக்கல் செய்யலாம். அவை புதன் மற்றும் வியாழன் விசாரிக்கப்படும். விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக 20  நீதிபதிகள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுகிறார்கள். இதேபோல மதுரை கிளையில் 15 நீதிபதிகள், விடுமுறை கால நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்….

The post .உயர் நீதிமன்ற கோடை விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் நியமனம்: ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,High Court ,Chief Registrar ,K.Govindarajan Thilakavathy ,Madras High Court ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...