×

தனியார் பள்ளியில் மோதல் 6 மாணவர்கள் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நயினார்கோவில் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பிளஸ் 2 படித்து வருகின்றனர். பள்ளிக்கு இவர்கள் நேற்று காலை பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக வகுப்பறையில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. மேஜைகளை தூக்கி தாக்கிக் கொண்டனர். இத்தாக்குதலில் மாணவர் ஒருவர் தலையில் படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 மாணவர்களையும் கைது செய்தனர்….

The post தனியார் பள்ளியில் மோதல் 6 மாணவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Nainarkovil ,Ramanathapuram.… ,Dinakaran ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை...