×

எம்எல்ஏ பரந்தாமன் தந்தை இந்திரன் மறைவு: அமைச்சர் அஞ்சலி

ஆவடி: ஆவடி அருகே திருநின்றவூரில் எழும்பூர் எம்எல்ஏ இ.பரந்தாமனின் தந்தை இந்திரன் காலமானார். அவரது உடலுக்கு அமைச்சர் நாசர் மற்றும் திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். சென்னை எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் இ.பரந்தாமன். இவரது தந்தை இந்திரன் (74). ஆவடி அருகே திருநின்றவூரில் குடும்பத்துடன் வசித்தார். நேற்று முன்தினம் இந்திரனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அவர் மரணம் அடைந்தார்.இதையறிந்ததும் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் நேரில் சென்று, அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பரந்தாமன் எம்எல்ஏ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன், ஆர்.டி.சேகர், காரப்பாக்கம் கணபதி, நகர செயலாளர் நடுக்குத்தகை ரமேஷ், ஆர்.எஸ்.ராஜ், ராஜன், பொன்விமல், எம்.குமார், நகரமன்ற தலைவர் உஷா ரவி, துணைத் தலைவர் சரளா நாகராஜன், பூவை பரமசிவம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுதர்சனம், இளைஞரணி காமேஷ், மாணவரணி துணை அமைப்பாளர் கார்த்திக் உள்பட ஏராளமான திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். இந்திரனின் உடல் நேற்று மாலை 4.30 மணிக்கு திருநின்றவூரில் உள்ள சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது….

The post எம்எல்ஏ பரந்தாமன் தந்தை இந்திரன் மறைவு: அமைச்சர் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : MLA ,Parantham ,Indra ,Minister ,Anjali ,Avadi ,Egmore ,E. Barandhaman ,Indran ,Tiruninnavoor ,Nasser ,
× RELATED அண்ணா பல்கலை. பதிவாளராக டாக்டர்...