மும்பை: டீப் ஃபேக்’ என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக ராஷ்மிகா மந்தனாவின் போலியான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், தற்போது கேத்ரினா கைஃப்பின் போலியான போட்டோ ஒன்று அதிவேகமாகப் பரவி வருகிறது.
‘டீப் ஃபேக்’ என்ற ஏஐ தொழில்நுட்பத்தின் மூலமாக, உண்மையைப் போலவே தோற்றமளிக்கும் போலி வீடியோக்களும், போட்டோக்களும் வேகமாகப் பரவி வருகின்றன. அந்தவகையில் ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வேறொரு பெண்ணின் உடலுடன் பொருத்திய ஆபாச போலி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக ராஷ்மிகா கவலையடைந்து பதிவு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ‘டீப் ஃபேக்’ மூலமாக கேத்ரினா கைஃப்பின் போலி போட்டோ ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. சல்மான்கானுடன் அவர் நடித்துள்ள ‘டைகர் 3’ என்ற படம், வரும் 12ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது. இதில் ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளர் ஒருவருடன் குளியலறையில் வெள்ளை நிற துண்டு அணிந்து சண்டை போடும் ஒரு போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேத்ரினா கைஃப் பதிவிட்டிருந்தார்.
மேலும், இக்காட்சி படமாக்கப்பட்டபோது தான் சந்தித்த சவால்கள் குறித்தும் அதில் தெரிவிந்திருந்தார். தற்போது கேத்ரினா கைஃப்பின் அந்த ஒரிஜினல் போட்டோவை யாரோ ஒருவர் ‘டீப் ஃபேக்’ தொழில்நுட்பத்தின் மூலமாக ஆபாசமாகச் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பரவச் செய்திருக்கிறார். இந்த போலியான போட்டோ வைரலாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post ராஷ்மிகாவை தொடர்ந்து கேத்ரினாவின் போலியான போட்டோ: பாலிவுட்டில் அடுத்தடுத்து அதிர்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.