×

போதை மாத்திரை விற்ற 2 மாணவர்கள் சிக்கினர்

பூந்தமல்லி: மதுரவாயலில் போதை மாத்திரை விற்ற 2 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.மதுரவாயல் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக மதுரவாயல் போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், மதுரவாயல் சீமாத்தம்மன் நகர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் நேற்று மடக்கி பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். அதில், மதுரவாயலை சேர்ந்த கிஷோர்குமார் (21), குகன் (21) என்பதும், இவர்கள் சென்னையில் தனியார் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர். மேலும், இவர்கள் யாரிடம் இருந்து போதை மாத்திரைகளை வாங்கினர், இதில் தொடர்புடைய நபர்கள் யார் என போலீசார் விசாரிக்கின்றனர்….

The post போதை மாத்திரை விற்ற 2 மாணவர்கள் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Poonthamalli ,Maduravalai ,Maduravaya ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லியில் பரபரப்பு இந்து...