×

விவசாயி வீட்டில் நகை கொள்ளை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரதீஷ்(37). விவசாயி. சொந்த வேலையாக இரண்டு தினங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் ஜதாராபாத்  சென்றிருந்தார். அவர் வீட்டில் கார் ஓட்டுனராக இருப்பவர் மற்றொரு  பிரதீஷ்(21). நேற்று காலை பணிக்கு வந்தார். அப்போது, வீடு உடைக்கப்பட்டு பீரோவில் 21 சவரன், ரூ.30 ஆயிரம் ரொக்கம், 5 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளைபோனது தெரியவந்தது. புகாரின்படி பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post விவசாயி வீட்டில் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Oothukottai ,Pratish ,Periyapalayam ,Jadarabad ,Dinakaran ,
× RELATED பெரியபாளையம் அருகே பல மாதங்களாக...